ஒரு சாவே உலுக்கி விடும்
ஒடிசாவில் பல நூறு இந்தியாவே சிந்தியதே
இதற்காக கண்ணீரு சொந்த ஊரு போவதற்காய்
டிக்கெட்டு எடுத்தவர்கள் சாவூரு போய்
சேர்ந்த சங்கடமும் வந்ததென்ன கோர விபத்தை ஏற்படுத்தும்
என்பதை அறிந்து தான் கோரமண்டல் என்றாரோ
அடுக்கி வைத்த பிணக்குவியல் அங்கங்கே அடிப்பட்டோர்
பார்த்த மனம் பதறுதய்யா பாவிகளே பதிலென்ன?
சரக்கு ரயில் மேலேறி பல பெட்டி நின்னுடுச்சாம்
வாய் வீச்சு காரர்களின் வண்டவாளம் தான் தண்டவாளம் எறிடுச்சு
உடலுக்குள் அட்டாக்கு முகத்துக்கு மேக்கப்பு சவடால்காரர்களை சரி செய்ய வேண்டாமா?
வந்தே பாரத் தந்தோம் என்றார்கள் வந்தவர்கள் நொந்தாரே வரலாறு சிரிக்காதா?
சாதனைக்கு பெருமைக் கொண்டு சத்தமாய் முழங்குவோர்கள்
விபத்துக்கு பொறுப்பேற்று விளக்கம் தர வேண்டாமா?